நடிகர், நடிகைகளுக்கு சரத் எச்சரிக்கை!
சென்னை: அமெரிக்க விசா பெற முறைகேடான வழியைப் பயன்படுத்தியதாக உறுதி செய்யப்படும் நடிகர், நடிகைகள் மீது பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
தமிழ்த் திரையுலகினர் உள்பட தென்னிந்தியத் திரையுலகினர் பெருமளவில் விசா மோசடியில் ஈடுபட்டிருப்பதை அமெரிக்க துணைத் தூதரகம் அம்பலப்படுத்தியுள்ளது.
போலியான ஆவணங்களைக் காட்டி, பெண் ஒருவரை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல விசா கோரி விண்ணப்பித்து நடிகை புளோரா 2 நாட்களுக்கு முன்பு சிக்கி கைதானார்.
இதையடுத்து தென்னிந்தியத் திரையுலகைச் சேர்ந்த 200 நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலகினர், இதேபோன்ற விசா மோசடி காரணமாக அமெரிக்கா செல்ல நிரந்தரத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் அறிவித்தது.
இதுதவிர தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த 10 நடிகர், நடிகைகளின் பட்டியலையும் சென்னை காவல்துறையிடம் அமெரிக்க துணைத் தூதரகம் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளது.
முன்னணிக் கலைஞர்கள் சிலரது பெயரும் இதில் அடிபடுவது திரையுலகினரை பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறுகையில், இதுவரை இந்த விவகாரம் குறித்து அமெரிக்க துணைத் தூதரகம் எங்களைத் தொடர்பு கொள்ளவில்லை. எந்தவித புகாரையும் அனுப்பவில்லை. தவறு செய்தவர்கள் என்று கூறப்படுவோர் குறித்த பட்டியலையும் தரவில்லை.
ஒருவேளை அமெரிக்க துணைத் தூதரகம் கூறுவது போல எங்களது உறுப்பினர்கள் (நடிகர், நடிகையர்) தவறு செய்திருப்பதாக உறுதியானால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் சங்கத்திலிருந்து நீக்கப்படுவார்கள்.
இது இந்திய இறையாண்மை குறித்த விஷயம். இதில் சமரசத்திற்கு இடமில்லை. இந்தியர்கள் அனைவருக்கும் ஒரே விதிதான். இதில் நடிகர், நடிகைகள் விதி விலக்கல்ல என்றார் சரத்குமார்.
யு.எஸ். தூதரகம் எச்சரிக்கை:
போலி ஆவணங்களைக் காட்டி விசா பெற முயன்று பிடிபட்டால் அவர்கள் நிரந்தரமாக அமெரிக்காவுக்குள் நுழைய முடியாது என்று அமெரிக்க துணைத் தூதர் டேவிட் ஹாப்பர் எச்சரித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஹாப்பர்,
அமெரிக்க துணைத் தூதரகத்தின் மோசடித் தடுப்பு பிரிவினர் கடந்த ஆண்டு மே மாதமே இந்த மோசடியைக் கண்டுபிடித்து விட்டனர்.
இந்த மோசடிகளில் தொடர்புடையவர்கள் திரைத் துறையினருடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு கொண்டிருந்ததால், திரையுலகினர் பலரும் இந்த மோசடியில் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு வந்தது.
அவர்கள் இந்தித் திரையுலகினரா, தெலுங்குத் திரையுலகினரா, தமிழ்த் திரையுலகினரா என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால் மோசடியில் சிக்கியவர்கள் அனைவருமே தென்னிந்தியத் திரையுலகினருடன் தொடர்புடையவர்கள் என்பது மட்டும் உறுதியாகத் தெரிய வந்துள்ளது.
இதுபோன்ற இடைத் தரகர்களால் அப்பாவி மக்கள் ஏமாற்றப்பட்டு வருவது வருத்தம் தருகிறது.
போலியான ஆவணங்களைக் காட்டி விசா பெற முயன்று பிடிபடுவோர் அமெரிக்காவுக்கு நிரந்தரமாக செல்ல தடை விதிக்கப்படுவார்கள். மோசடியா, விசா பெற்றிருப்போருக்கு, அவர்களுக்கு வழங்கப்பட்ட விசா ரத்து செய்யப்படும்.
மோசடியான முறையில் விசா பெற்று அமெரிக்கா சென்றவர்கள், அங்குள்ள குடியேற்றப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு அமெரிக்க சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த பிரச்சினை குறித்து விரைவில் தென்னிந்தியத் திரையுலகினருடன் பேசவுள்ளோம்.
மோசடியான முறையில் பெறப்பட்ட விசாக்கள் அனைத்தும் பி1 வகை விசாக்கள் ஆகும். வர்த்தகம் அல்லது வர்த்தகம் தொடர்பான கூட்டங்களில் கலந்து கொள்ளச் செல்வோர் பெறும் விசாக்கள் இவை என்றார் ஹாப்பர்.
-
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications