ஏப்ரல் முதல் திருசெந்தூர்-நெல்லை ரயில்
திருச்செந்தூர்: திருச்செந்தூர்-நெல்லை இடையே ஏப்ரல் மாதம் முதல் ரயில் சேவை தொடங்கும் என தென்னக ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் சோப்ரா தெரிவித்தார்.
திருச்செந்தூர்-நெல்லை இடையே 62 கிமீ தூரம் அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையை சோப்ரா ஆய்வு செய்தார். நெல்லையிலிருந்து டிராயிலேயே திருச்செந்தூர் வரை அவர் சென்று ஆய்வு நடத்தினார்.
வழியில் உள்ள ரயில் நிலையங்களையும் பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையி்ல்,
நெல்லை-திருச்செந்தூர் இடையே அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்து ஆணையர் ஆய்வுக்காக காத்திருக்கிறோம். அவர் ஆய்வு செய்த பின்னர் ஏப்ரல் மாதத்தில் ரயில்கள் இயக்கப்படும்.
ஆறுமுகநேரி ரயில் நிலையத்தில் உப்பு ஏற்றுமதி செய்வதற்கான வசதியை கேட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள வருவாயை பொறுத்து அதற்குரிய வசதி செய்து தரப்படும்.
திருச்செந்தூர் நிலையத்தில் முன் பதிவு நேரத்தை அதிகரிப்பது ரயில் பயணிகள் எண்ணிக்கையை பொறுத்துதான் செய்ய முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications