விடாது மழை: காய்கறிகள் விலை 'கிடுகிடு'!
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் மேலும் ஒருநாள் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த திடீர் கன மழை காரணமாக காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
வங்க கடலில், மன்னார்வளை குடாவில் இருந்து தென் மேற்கு பகுதிவரை உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை பெய்யும். பாண்டிச்சேரியிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று இரவும், இன்று காலையும் சென்னையில் பரவலாக நல்ல மழை பெய்தது.
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் நேற்று அதிக அளவாக 80 மில்லி மீட்டர் பெய்துள்ளது. சென்னை பூந்தமல்லி, செங் குன்றம், செய்யூர் ஆகிய இடங் களில் 70 மில்லி மீட்டரும், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூரில் 60 மி.மீ. மழையும் பெய்திருக்கிறது.
இந்தநிலையில், தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழை காரணமாக காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, மக்கள் விரும்பி சாப்பிடும் முருங்கைக்காய், தக்காளி, அவரைகாய், பச்சை பட்டாணி, பட்டர்பீன்ஸ் உள்ளிட்ட காய்கறி வகைகள் கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications