தெரு நாய் தொல்லை - ஸ்ரீவில்லிபுத்தூரில் மாணவர்கள் பீதி

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளிக்கு அருகே திரியும் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்திருப்பதால் மாணவ, மாணவியர் பெரும் பீதியடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது அச்சம்தவித்தான் குளம்.

இங்கு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்களை நாய்கள் கடிக்கும் செயலும் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை புகார் கூறியும் ஒரு நடவடிக்கையும் இல்லை.

அங்குள்ள பள்ளி ஒன்றில் படிக்கும் 10 வயது மாணவன் தன்ராஜ் என்பவனை சமீபத்தில் வெறி நாய் கடித்து குதறியது.

அதே போன்று நரிக்குடி பகுதியில் வெறி நாய் ஒன்று அந்த பகுதியில் 4 ம் வகுப்பு படிக்கும் மாணவி கவிதா என்பவரை கடித்து குதறியது. இதில் அவர் அதே இடத்தில் மயங்கி விழுந்தார்.

நாய்கள் தொல்லையாலும், அடிக்கடி நாய் கடிப்பதாலும் மாணவ, மாணவியர் பள்ளிக்கூடங்களுக்குப் போக அச்சப்படுகின்றனர். அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு நாய்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+