For Daily Alerts
Just In
சென்னையில் திபெத் மாணவர்கள் அமைதிப் பேரணி
சென்னை: சென்னையில் 200க்கும் மேற்பட்ட திபெத்திய மாணவர்கள், மெழுகுவர்த்திகளை ஏந்தியபடி சீன வன்முறையைக் கண்டித்து பேரணி நடத்தினர்.
திபெத்தின் தலைநகரான லாசாவில் சுதந்திரம் வேண்டி பெரும் போராட்டம் வெடித்துள்ளது. இதையடுத்து சீன பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.
சீன அரசின் இந்த அடக்குமுறை நடவடிக்கையைக் கண்டித்து சென்னையில் படிக்கும் திபெத்திய மாணவ, மாணவியர் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தினர்.
200க்கும் மேற்பட்டோர் இந்த அமைதிப் பேரணியில் கலந்து கொண்டனர். மெரீனா கடற்கரை காந்தி சிலையிலிருந்து நுங்கம்பாக்கம் வரை இந்தப் பேரணி நடந்தது.
பேரணியின் தொடக்கத்தில் லாசாவில் அமைதி திரும்பவும், திபெத் விடுதலை பெற வேண்டியும் காந்தி சிலை முன்பு திபெத்திய மாணவ, மாணவியர் அமைதியான முறையில் பிரார்த்தனை செய்தனர்.
Comments
Story first published: Sunday, March 16, 2008, 14:12 [IST]