நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் ரெடி-சரத்குமார்
Subscribe to Oneindia Tamil
மதுரை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம். தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம் என அ. இ. ச.ம. கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள கட்சி தலைவர் சரத்குமார் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில்,
நாங்கள் தேர்தலுக்கு தயாராக உள்ளோம்.
தமிழகம், பாண்டிச்சேரி உள்பட நாடாளுமன்ற தொகுதிகள் நாற்பதிலும் வேட்பாளர்களை நிறுத்துவோம். முதல் கட்டமாக தற்போது 27 வேட்பாளர்களை தேர்வு செய்துவிட்டோம். (நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தான் தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது)
எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க எங்கள் கட்சி தயாராக உள்ளது. யாருடனும் கூட்டணி வைக்க மாட்டோம் என்றார்.












Click it and Unblock the Notifications