தூக்கிலிட்டால் தற்கொலை செய்வோம்-சரப்ஜித் குடும்பம்

1990-ம் ஆண்டு லாகூரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சரப்ஜித்சிங் என்பவரை பாகிஸ்தான் போலீசார் கைது செய்தனர். அவருக்கு பாகிஸ்தான் கோர்ட்டு தூக்கு தண்டணை விதித்தது.
பாகிஸ்தான் சிறையில் 17 ஆண்டுகளாக சரப்ஜித் சிங் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தனது கணவர் அப்பாவி. அவரது தண்டணையை ரத்து செய்து விடுவிக்க வேண்டும் என்று சரப்ஜித் சிங்கின் மனைவி சுக்பிரீத்கவுர், பாகிஸ்தான் அதிபர் முஷாரப்புக்கு கடைசி கருணை மனுவை அனுப்பினார்.
ஆனால் இந்த மனுவை முஷாரப் நிராகரித்து விட்டநிலையில் வரும் ஏப்ரல் 1ம் தேதி சரப்ஜித் சிங் தூக்கிலிடப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சரப்ஜித் சிங்கைக் காப்பாற்ற வேண்டும் என்று அவரது குடும்பத்தார் உள்பட பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வலுத்துள்ளன.
ராஜ்யசபாவில் நேற்று காலை காங்கிரஸ் உறுப்பினர் ரஷீத் அல்வி இப்பிரச்னையை எழுப்பினார். சரப்ஜித் சிங் குற்றமற்றவர். அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இந்த சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இதே பிரச்னையை, பா.ஜ., உறுப்பினர் முக்தார் அப்பாஸ் நக்வியும் எழுப்பினார். அவர் பேசுகையில் சரப்ஜித் சிங்கிற்கு மரண தண்டனை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்ட பிறகும், மத்திய அரசு மவுனம் சாதிக்கிறது. இதை ஏற்கமுடியாது. உடனடியாக, இவ்விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு, சரப்ஜித் சிங்கை காப்பாற்ற வேண்டும் என்றார்.
இதற்கு சபை தலைவர் அமீத் அன்சாரி, அனைவருக்குமே கவலையளிக்கக் கூடிய இப்பிரச்னை குறித்து அரசு தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில், டில்லியில் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஆனந்த் சர்மா நிருபர்களிடம் பேசுகையில், சரப்ஜித் சிங் விவகாரத்தில், இந்திய மக்களின் உணர்வுகளை, பாகிஸ்தான் அரசுக்கு ஏற்கனவே தெரிவித்துள்ளோம். இது மிகவும் உணர்வு பூர்வமான விஷயம். எனவே சரப்ஜித் சிங்குக்கு கருணை காட்டும்படி, பாகிஸ்தான் அரசுக்கு வேண்டுகோள் மட்டுமே விடுக்க முடியும். அவருக்கு சிறிதளவாவது இரக்கம் காட்டி, மரண தண்டனையை நிறைவேற்றுவதை ஒத்திப் போட வேண்டும் எனவும் கேட்டுள்ளோம்.
மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு இரக்கம் காட்டவேண்டும் என்பதே மத்திய அரசின் நிலை.
சரப்ஜித் சிங்குக்கு வரும் ஏப்ரல் 1ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது என்பதை, மீடியா மூலமே எனக்கு தெரியும். அதிகார பூர்வமாக, பாகிஸ்தான் அரசிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.' இவ்வாறு அமைச்சர் ஆனந்த் சர்மா கூறினார்.
இதற்கிடையே சரப்ஜித் சிங்கின் மனைவி சுக்பிரீத்கவுர் மற்றும் 2 மகள்கள் இது பற்றி பேட்டியளித்தனர். அவர்கள் கூறியதாவது:
சரப்ஜித்சிங் ஓர் அப்பாவி. தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்கு சென்று விட்ட அவரை குண்டு வைத்த வழக்கில் கைது செய்து தூக்கு தண்டணை அறிவித்து விட்டனர்.
மத்திய அரசு அவர்களை எப்படியாவது காப்பாற்றி விடும் என்று நம்பிக்கையோடு இருக்கிறோம். இதையும் மீறி அவரை தூக்கில் போட்டால் நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்வோம் என்றனர்.
ஏற்கனவே சரப்ஜித்சிங்கின் சகோதரி தஸ்பீர்கவுர் தனது சகோதரனை விடுவிக்க கோரி தற்கொலை செய்ய முயற்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications