நீர் பங்கீடு-தமிழகம் ஓரவஞ்சனை: கேரளா புகார்

கேரளாவில் சட்டசபைக் கூட்டத் தொடர் நடக்கிறது. இதில் உறுப்பினரின் கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கையில் நீர்வளத்துறை அமைச்சர் பிரேமச்சந்திரன் இந்தக் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.
மேலும், பரம்பி்க்குளம் - ஆழியாறு திட்ட பாசன நீர் பங்கீட்டு ஒப்பந்தப்படி கேரளாவுக்குச் சேரவேண்டிய தண்ணீரை கிடைக்கவிடாமல் ஓரவஞ்சனையாக தமிழக அரசு செயல்படுகிறது.
ஆழியாறு நீர்த்தேக்கத்தில் கடந்த 1972ம் ஆண்டில் இருந்து இதுவரை மூன்றுமுறைதான் பிப்ரவரி மாதம் 1ம் தேதியன்று முழு கொள்ளளவுக்கு நீர் தேக்கப்பட்டது.
இதனால் கோடைக்காலத்தில் கேரளாவுக்கான தண்ணீர் சப்ளையை முழுமையாக பெற முடியாதநிலை உருவாக்கப்பட்டது.
ஆனால் மழைக்காலத்தில் உபரி நீரைத் திறந்துவிட்டுவிட்டு கேரளாவுக்கான பங்கை அளித்துவிட்டதாக தமிழக அரசு சப்பைக்கட்டுகிறது. இந்த பிரச்னையை கேரள அரசு பலமுறை எழுப்பியும் அந்த அரசு கண்டுகொள்ளவி்ல்லை என்றார்.












Click it and Unblock the Notifications