வாணியம்பாடி, திருச்சி கல்லூரிகளுக்கு மத்திய அரசு நிதியுதவி

Subscribe to Oneindia Tamil

வாணியம்பாடி: வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி மற்றும் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி ஆகியவற்றுக்கு, மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறையின் நிதியுதவி கிடைத்துள்ளது.

இந்த உதவியின்படி இரு கல்லூரிகளுக்கும் ஆய்வு தொடர்பான புதிய அறிவியல் சாதனங்களை வாங்க நிதியுதவி அளிக்கப்படும். தலா ரூ. 32 லட்சம் நிதி இரு கல்லூரிகளுக்கும் வழங்கப்படும்.

இதுகுறித்து இஸ்லாமிய கல்லூரி வேதியியல் துறை தலைவர் சையத் சபி கூறுகையில், தமிழகத்தில் இஸ்லாமியக் கல்லூரியும், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி ஆகிய இரண்டு மட்டும்தான் இந்த நிதியதவி பெற தகுதி பெற்றுள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு இந்த நிதியுதவி கிடைக்கும்.

இந்த நிதியின் மூலம் தரமான, வசதிகளுடன் கூடிய அறிவியல் உபகரணங்கள் வாங்கப்படும். இஸ்லாமியக் கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது, பிற கல்லூரி மாணவர்களும், வேலூரைச் சுற்றியுள்ள தொழில் நிறுவனங்களும் இந்த ஆய்வக வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பயன்பாட்டுக் கட்டணமாக ரூ. 150 வசூலிக்கப்படும். இந்த கட்டணம், ஆய்வக பராமரிப்புக்கு பயன்படுத்தப்படும்.

இந்த ஆய்வகத்தின் செயல்பாடுகளைப் பொறுத்து அடுத்து ஐந்து ஆண்டுகளில் இந்த நிதியின் அளவு ரூ. 1 கோடியாக உயர்த்தப்படும் என்றார் ஷபி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+