சமத்தா பேசுங்க ... ஜெ. அட்வைஸ்
சென்னை: சட்டசபையில் மக்கள் பிரச்சினைகள் குறித்து ஆதாரத்துடன் பேச வேண்டும். பேச்சில் நிதானம், பொறுமை அவசியம் தேவை என்று அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு கட்சிப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவுரை கூறியள்ளார்.
அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. இக்கூட்டத்திற்கு ஜெயலலிதா தலைமை தாங்கினார். சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பிரச்சினைகளை எப்படி எழுப்ப வேண்டும் என்பது குறித்து ஜெயலலிதா விரிவாக விளக்கிப் பேசினார். எம்.எல்.ஏக்களுக்குப் பல்வேறு அறிவுரைகளையும் வழங்கினார்.
எம்.எல்.ஏக்ளிடையே ஜெயலலிதா பேசுகையில், நான் சட்டசபையில் கடந்த முறை பேசும்போது அமைச்சர்கள் குறுக்கிட்டார்கள். அதிமுக ஆட்சிக்கு எதிரான கருத்துக்களை சட்டசபையில் பேசும்போது, நாம் குறுக்கிட்டு பதிலளிக்க வேண்டும்.
மக்கள் பிரச்சினைகளை அதிக அளவில் எழுப்ப வேண்டும். உரிய ஆதாரத்துடன் இவற்றை எழுப்ப வேண்டும். எந்த விஷயமானாலும் ஆதாரம் அவசியம்.
காலம் நமக்கு சாதகமாக கனிந்து கொண்டு வருகிறது. எனவே பொறுமையாக, நிதானமாக சட்டசபையில் நமது அணுகுமுறையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications