காதலியின் மகளை கொன்று இளைஞர் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த தனது காதலி, இந்தியாவுக்குத் திரும்பி வந்து தன்னுடன் வாழ மறுத்ததால், காதலியின் 7 வயது மகளை தண்ணீர் வாளியி்ல் மூழ்கடித்து கொலை செய்த நபர் தானும் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை கே.கே.நகரைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (38). தச்சு வேலை செய்து வந்தார். இவருக்கும், சினிமாவில் துணை நடிகையாக இருக்கும் அம்மு என்கிற சுதாவுக்கும் (35) காதல் ஏற்பட்டது.

சுதா தனது கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு செல்வகுமாரி (8), இளவரசி (7) என இரு மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் சுதாவுக்கு செளதியில் வீட்டு வேலை கிடைத்தது. இதையடுத்து ரெட்டேரியில் வசிக்கும் தனது சகோதரி கெளரியிடம், தனது இரு மகள்களையும் விட்டு விட்டு போய் விட்டார் சுதா.

இதனால் ஏமாற்றமடைந்தார் பன்னீர் செல்வம். செளதி வேலை வேண்டாம். சென்னைக்கே வந்து விடு என்று சுதாவை வற்புறுத்தி வந்தார் பன்னீர் செல்வம். ஆனால் அதை ஏற்க மறுத்து விட்டார் சுதா.

இந் நிலையில் அடிக்கடி கெளரியின் வீட்டுக்குச் சென்று சுதாவின் இரு மகள்களையும் பார்க்கும் வழக்கம் கொண்ட பன்னீர் செல்வம். நேற்று முன்தினமும் அவரது வீட்டுக்குச் சென்றார். பின்னர் செல்வகுமாரியையும், இளவரசியையும் அழைத்துக் கொண்டு தனது வீட்டுக்கு வந்தார்.

செல்வகுமாரியை வெளியே அனுப்பி விட்டு இளவரசியின் தலையை தண்ணீர் வாளியில் மூழ்கடித்து கொலை செய்தார். உடலை, அப்படியே வாளியில் விட்டுவிட்டு வெளியேறினார்.

இந்தக் கொலை தொடர்பாக பன்னீர்செல்வத்தின் வீட்டை போலீசார் சோதனையிட்டபோது அரை பாட்டில் விஷம் இருந்தது. மீதி விஷத்தை பன்னீர்செல்வம் குடித்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தபடி அவரை தேட ஆரம்பித்தனர்.

இந் நிலையில் குமரன் நகர் பகுதியில் ன்னீர் செல்வம் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது உறுதியானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+