ஓகேனக்கல்லில் கர்நாடக பாஜக தொடர்ந்து போராட்டம்-பதற்றம்
ஓகேனக்கல்: ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை எதிர்த்தும் இந்தப் பகுதியை சொந்தம் கொண்டாடியும் கர்நாடக பாஜகவினர் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
கர்நாடக பாஜக தலைவர் எதியூரப்பா தலைமையிலான பாஜகவினர் இங்கு போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து நேற்று கர்நாடக பாஜகவினர் கட்சியின் விவசாய அணித் தலைவர் ஈஸ்வரசந்திர தலைமையில் மீண்டும் ஓகேனக்கல் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடக மாநில எல்லையான மாறு கொண்டாய் பகுதிக்கு வந்த இவர்கள் பரிசல்கள் மூலம் மணல் திட்டு பகுதிக்கு வந்தனர்.
அப்போது ஒகேனக்கல் நமதே, ஒகேனக்கல்லை மீட்போம் என்று கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் சிறுமலை மற்றும் சினி பால்ஸ், தொங்கு பாலம், பெரிய அருவி ஆகிய பகுதிகளில் அத்துமீறி நுழைய முயன்றனர்.
அவர்களை தமிழக போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதைடுத்து தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி திரும்பிச் சென்றனர்.
பாஜகவினரின் இந்த தொடர் போராட்டத்தால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. பீதியால் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
இதையடுத்து அங்கு தமிழக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பெண்ணாகரம் துணை எஸ்பி கிருஷ்ணன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் முகாமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications