For Daily Alerts
Just In
22 ஆண்டுகள் கழித்து சாதனை-ரூ.84 கோடி உபரி பட்ஜெட்!
தமிழகத்தின் 2008-09ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் அன்பழகன் நேற்று தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் தமிழக அரசின் மொத்த வருவாய் ரூ.51,505 கோடியாகும். இதில் அரசின் செலவு ரூ.51,421 கோடி. இதன்மூலம் ரூ.84 கோடி உபரி வருவாய் இருக்கும்.
கடந்த 22 ஆண்டுகளாக பற்றாக்குறை பட்ஜெட்டைத் தான் தமிழகம் பார்த்து வந்தது.
நடப்பு நிதியாண்டிலும் கூட ரூ.101 கோடி வருவாய் பற்றாக்குறை இருக்கும் என்று கடந்த ஆண்டு பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், வரி வருவாய், ஆயத்தீர்வை, முத்திரைத் தாள் விற்பனை, பத்திரப் பதிவு ஆகியவை மூலம் அரசுக்கு வருவாய் அதிகரித்தது. இதனால் வருவாய் அதிகரித்துள்ளது. இதனால் இந்த உபரி பட்ஜெட் சாத்தியமாகியுள்ளது.
கடந்த 1985ம் ஆண்டுக்குப் பிறகு 22 ஆண்டுகளுக்கு கழித்து இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
Story first published: Friday, March 21, 2008, 11:33 [IST]