தலித் இட ஒதுக்கீட்டில் கை வைக்க முயற்சி-மீராவின் 'உஷார்' நடவடிக்கையால் தவிர்ப்பு

மத்திய பணியாளர் நலத்துறை உருவாக்கியுள்ள புதிய மசோதாவின் வரைவு திட்டத்தை அமைச்சர்கள் குழு சில நாட்களுக்கு முன் இறுதி செய்தது.
அப்போது அந்த மசோதாவில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான காலியிடங்களை, பிற சமூகத்தினரைக் கொண்டு நிரப்பக் கூடாது என்று கூறப்பட்டிருந்ததோடு,
அதே நேரத்தில், இந்தப் பணியிடங்கள் தொடர்ந்து காலியாக இருக்கும்பட்சத்தில், அதில் ஒரு பகுதியை மற்ற பிரிவினரை கொண்டு நிரப்பலாம் என்ற புதிய விதிமுறை சேர்க்கப்பட்டிருந்தது.
இந்த விதிமுறையை மத்திய அரசில் உள்ள சில சக்திகளும் சில அதிகாரிகளும் இடையில் சொருகிவிட்டிருந்தனர்.
மசோதாவை மிக உன்னிப்பாக படித்தபோது இது சமூக நீதித்துறை அமைச்சர் மீரா குமாரின் கண்ணில் பட்டது. இதனால் டென்சனான மீரா குமார் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் கோட்டாவை அபகரிக்கும் முயற்சி இது என்று குரல் உயர்த்திய மீரா, இந்த மசோதா நிறைவேறினால் அது மத்திய அரசுக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தும் என எச்சரித்தார்.
மீரா குமாரின் இந்த கருத்தை மூத்த அமைச்சரான ராம்விலாஸ் பஸ்வானும் ஆமோதிக்கவே, இந்த விதிமுறையை நீக்க, அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான குழு ஒப்புக் கொண்டது.
ஏற்கனவே பல்வேறு அரசுத் துறைகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கோட்டாவை நிரப்பாமல் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மத்திய அரசுப் பணியில் ஆயிரக்கணக்கான தலித் மக்கள் கோட்டா இடங்கள் காலியாக உள்ளன.
தகுதியான தலித் கேண்டிடேட் கிடைக்கவில்லை என்று இதற்கு சாக்குபோக்கு கூறி வருகின்றனர்.
இந் நிலையில் தான் தாழ்த்தப்பட்ட மக்களின் கோட்டாவிலேயே மறைமுகமாக கை வைக்க (தகுதியான தலித் பணியாளர் கிடைக்காவிட்டால் வேறு சமூகத்தைச் சேர்ந்தவரை நியமிக்கலாம் என்ற விதியை புகுத்தி) முயன்றுள்ளனர்.
இந்த ஆபத்தைத் தான் மீரா குமார் கடைசி நேரத்தில் கண்டுபிடித்து தவிர்த்துள்ளார்.
-
கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின் -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம்












Click it and Unblock the Notifications