பார்வையற்றோருக்கு ஜனாதிபதி மாளிகையின் மொகல் கார்டன் திறப்பு
டெல்லி: டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள புகழ் பெற்ற மொகல் தோட்டமும், மூலிகைத் தோட்டமும், பார்வையற்றோருக்காக மட்டும் விசேஷமாக நாளை திறக்கப்படவுள்ளது.
உலகப் புகழ் பெற்ற இரு தோட்டங்களும் நாளை காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை திறக்கப்பட்டிருக்கும். பார்வையற்றோருக்காக விசேஷமாக இரு தோட்டங்களும் நாளை திறக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு மணி நேரமும் பார்வையற்ற மாணவ, மாணவியர் இரு தோட்டங்களுக்கும் விசிட் செய்யலாம்.
பார்வையற்ற பிற பொதுமக்கள் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை தோட்டத்தை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
12வது நுழைவாயில் வழியாக பார்வையற்றோர் வந்து செல்லவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவரங்கள் அறிய குடியரசுத் தலைவர் மாளிகையைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:
23012960, 23015321
Extn. 4229, 4479.