எல்டிடிஈ- அல் கொய்தா தொடர்பு: இலங்கை புகார்
ஜெருசேலம்: விடுதலைப் புலிகளுக்கும், அல் கொய்தா உள்ளிட்ட பல சர்வதேச தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக இலங்கை பிரதமர் ரத்தினஸ்ரீ விக்கிரமநாயகே புதுத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேல் வந்துள்ள விக்கிரமநாயகே, ஜெருசலேமில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் அல் கொய்தா, தலிபான் உள்ளிட்ட பல சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.
சிரியா மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள தீவிரவாத பயிற்சி முகாம்களில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் ேசர்ந்த பல இளைஞர்கள் பயிற்சிப்
பெற்று வருகின்றனர்.
பாலஸ்தீனர்களிடமிருந்துதான் விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படைப் பிரிவைச் சேர்ந்த கரும்புலிகள் பயிற்சி பெறுகின்றனர்.
விடுதலைப் புலிகளுடன் நடக்கும் சண்டை, சிறுபான்மை சமூகத்திற்கும், பெரும்பான்மை சமூகத்திற்கும் இடையிலான போர் என்று கூறுவதை இலங்கை அரசு ஏற்காது என்றார் விக்கிரமநாயகே.
இஸ்ரேலுக்கு வந்துள்ள முதல் இலங்கை பிரதமர் விக்கிரமநாயகே என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications