பென்னாகரம் போலீஸ் துப்பாக்கி கொள்ளை-ஏட்டுகள் கைது

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி:தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் போலீஸ்காரரின் துப்பாக்கி கொள்ளை போன சம்பவத்தில் 2 ஏட்டுகள் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலையத்தைத் தொடர்ந்து பென்னாகரம் காவல் நிலையம் அருகே உள்ளது சார்நிலைக் கருவூலத்திலும் துப்பாக்கி கொள்ளை நடந்துள்ளது.

நேற்று முன்தினம் சார்நிலைக் கருவூலத்தில் இரவுப் பணியில் போலீஸ்காரர் நடராஜன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது தனது துப்பாக்கியை வைத்து விட்டு சாப்பிடச் சென்றார். பின்னர் திரும்பியபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது துப்பாக்கியைக் காணாமல் திக்கிட்டார்.

இதையடுத்து பென்னாகரம் காவல் நிலையத்தில் நடராஜன் புகார் கொடுத்தார். தகவல் அறிந்ததும் டிஐஜி செண்பகராமன், மாவட்ட எஸ்.பி. உள்ளிட்டோர் வந்து விசாரணை நடத்தினர்.

மீண்டும் போலீஸ் துப்பாக்கி கொள்ளை போன சம்பவம் தர்மபுரி காவல்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. காணாமல் போன துப்பாக்கியை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பகல் மற்றும் இரவு பணியில் ஈடுபட்டிருந்த ஏட்டுகள் அக்பர்பாஷா, நடராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், எஸ்ஐகள் செம்மண்ணன், கிரிஜாராணி ஆகியோரை சஸ்பென்ட் செய்ய பரிந்துரைப்பட்டுள்ளதாக ஐஜி சஞ்சய் அரோரா தெரிவித்தார்.

ஏட்டுகள், கருவூலம் அருகே டீக்கடை நடத்தி வரும் செல்வம் உள்பட 5 பேரிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+