மருத்துவமனையில் வாய் பேச முடியாத பெண் பலாத்காரம்
Subscribe to Oneindia Tamil
புவனேஸ்வர்: காது கேட்காத, வாய் பேச முடியாத பெண் மருத்துவமனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக மருத்துவமனை ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரிஸ்ஸா மாநிலத்தைச் சேர்ந்தவர் சஞ்சு (23). காது கேட்காத, வாய் பேச முடியாத பெண். ரயில் நிலையத்தில் யாரோ சிலரால் கடுமையாகத் தாக்கப்பட்டுக் கிடந்த இவரை தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மீட்டு, புவனேஸ்வர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிகிச்சையில் இருந்த சஞ்சுவை அந்த மருத்துவமனையின் துப்புரவு தொழிலாளி கழிவறையில் வைத்து பலாத்காரம் செய்தான். அதிர்ச்சியில் உறைந்திருக்கும் சஞ்சுவுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முந்தைய அதிர்ச்சியில் இருந்தே மீளாத சஞ்சுவுக்கு இது மேலும் அதிர்ச்சியும், பயத்தையும், மனதளவில் பாதிப்பையும் கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications