For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசு பஸ்-கார் மோதல்: 2 பேர் உடல் கருகி பலி

By Staff
Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பைபாஸ் சாலையில் இன்று காலை அரசு பஸ்சும் காரும் நேருக்கு நேர் மோதி கார் தீப்பிடித்து எரிந்ததில் டிரைவரும் வாலிபரும் உடல் கருகி இறந்தனர்.

ஜோலார்பேட்டையில் இருந்து கிருஷ்ணகிரிக்கு அரசு பஸ் இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. பெங்களூரில் இருந்து சென்னையை நோக்கி சென்ற கார் கிருஷ்ணகிரி- சென்னை ரோடு பை-பாஸ் ஜங்சனில் வந்துக் கொண்டிருந்தது. அப்போது காரும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் கார் தீப்பிடித்துக் கொண்டது.

மோதிய வேகத்தில் சிக்னலை உடைத்துக் கொண்டு சாலையோர தடுப்புச்சுவர் மீது பஸ் மோதி நின்றது. இதை பார்த்த அப்பகுதியினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் கார் டிரைவர், அதில் பயணம் செய்த வாலிபர் உடல் கருகி இறந்தனர்.

பலத்த தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளம்பெண்ணை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இறந்தவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X