8 லாரி, 2 டிராக்டர்களை திருடிய 9 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: திருடுபோன 8 லாரி, 2 ட்ராக்டர்களை போலீசார் இன்று மீட்டனர். இதுதொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் சமீபகாலமாக லாரிகள் மற்றும் டிராக்டர்கள் தொடர்ந்து திருடுபோனது. இதையடுத்து வாகனங்களை கண்டுபிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் திருடுபோன 8 லாரிகளையும், 2 டிராக்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.70 லட்சம். இந்த சம்பவங்களில் தொடர்புடைய 9 பேரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.












Click it and Unblock the Notifications