திருச்செந்தூர் கோயில் உண்டியலில் ரூ.29 லட்சம் வசூல்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியம் சுவாமி கோயில் உண்டியலில் ஒரு மாதத்தில் ரூ.29 லட்சம் வசூலாகியுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் பக்தர்கள் தங்களின் நேர்த்தி கடனை தங்கம், வெள்ளி, பணமாக செலுத்துவது வழக்கம். ஒவ்வொரு மாதமும் கடைசி வாரத்தில் உண்டியல் பணம் எண்ணப்படும்.
கடைசியாக கடந்த பிப்ரவரி மாத இறுதியில் உண்டியல் பணம் எண்ணப்பட்டது. இதையடுத்து கோயில் ஆணையர் பாஸ்கரன் தலைமையில் கோயில் பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர் பள்ளி மாணவர்கள் இன்று மீண்டும் உண்டியல் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
முக்கிய உண்டியல்களில் ரூ.29 லட்சம் வசூலானது. இது தவிர அன்னதான உண்டியலில் ரூ.42,646 வசூலானது.
மேலும், 603 கிராம் தங்கமும், 3,949 கிராம் வெள்ளியும் உண்டியலில் இருந்தது. பங்குனி உத்திர விழாவில் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு நேர்த்தி கடன் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications