மீன் லாரியில் கடத்தப்பட்ட ரூ.25 லட்சம் எரிசாராயம்
புனலூர்: தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு லாரி மூலம் கடத்தவிருந்த ரூ.25 லட்சம் மதிப்புள்ள எரிசாராய பிடிபட்டது.
திருநெல்வேலி மாவட்டம் புனலூர் போலீசார் வாழைத்தோடு என்ற பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். புளியரை வழியாக கேரளாவுக்கு மீன்கள் ஏற்றிக் கொண்டு கண்டெய்னர் லாரி அப்போது வந்தது. சோதனை செய்வதற்காக போலீசார் லாரியை மடக்கினர். இதைப் பார்த்த லாரி டிரைவர் மற்றும் கிளினர் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
இதையடுத்து போலீசார் அந்த லாரியை சோதனையிட்டனர். அப்போது மீன் பெட்டிகளுக்கு இடையே சுமார் 100க்கும் மேற்பட்ட கேன்களில் எரிசாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் எரிசாராய கேன்களையும் லாரியையும் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய லாரி டிரைவர் மற்றும் கிளினரை தேடி வருகின்றனர். பிடிபட்ட எரிசாராயத்தின் மதிப்பு ரூ.25 லட்சம் என்று போலீசார் தெரிவித்தனர்.