இளம்பெண்ணை கற்பழித்த சிறுவன் கைது
Subscribe to Oneindia Tamil
நாகை: வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணை கற்பழித்த 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மொளையூர் கிராமத்தை சேர்ந்த விவசாயியின் மகள் மீனா (வயது 19-பெயர் மாற்றப்பட்டுள்ளது).
அதே கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரின் மகன் ரகு (16), மீனா தனியே வீட்டில் இருந்தபோது பலவந்தமாக மானபங்கம் செய்தார்.
நடந்ததை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டிவிட்டு தப்பியோடினார்.
இதுபற்றி பெற்றோரிடம் மீனா கூறினார். இதையடுத்து தந்தை அளித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை மகளிர் போலீசார் ரவியை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications