குண்டர் சட்டத்தின் கீழ் 4 நக்சலைட்டுகள் கைது
தேனி: தேனி மாவட்ட வனப் பகுதியில் கைது செய்யப்பட்ட 4 நக்ஸலைட்டுகள் குண்டர் சட்டத்தின் கீழும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டம், வருச நாடு பகுதியில் 2007 ம் ஆண்டு டிசம்பர் மாதம் முருகானந்தம், பாலமுருகன், லெனின்குமார், மகாலிங்கம், யோகேஷ் ஆகிய நக்சலைட்டுகள் கடும் துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிறது. இந்த நிலையில் இவர்கள் தங்களுக்கு ஜாமீன் வேண்டி நீதி மன்றத்தை நாடினர்.
இந்த நிலையில் யோகேஷ் தவிர மற்றவர்கள் மீது பல்வேறு மாவட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளதால் அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சித் தலைவருக்கு காவல்துறை பரிந்துரைத்தது.
அதன் பேரில், முருகானந்தம், பாலமுருகன், லெனின்குமார், மகாலிங்கம் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய தேனி மாவட்ட கெலக்டர் சிரு உத்தரவிட்டார்.