For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுக கொடிக் கம்பம் வெட்டி சாய்ப்பு-மதிமுகவினர் கைது

By Staff
Google Oneindia Tamil News

கரூர்: கரூர் அருகே திமுக கொடிக் கம்பம் வெட்ட சாய்க்கப்பட்டதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

கரூர் அருகே உள்ள பரமத்தியில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று தொட்டம்பட்டி என்ற இடத்தில் 2 மர்ம நபர்கள் திமுக கொடிக் கம்பத்தை வெட்டி சாய்த்துவிட்டு தப்பி ஒடிவிட்டனர்.

தகவலறிந்த இதனால் திமுகவினர் கடும் ஆவேசம் அடைந்தனர். இதனால் கரூர் மாவட்டம் முழுவதும் பதட்டம் ஏற்பட்டது. இதுகுறித்து பரமத்தி ஒன்றிய திமுக கவுன்சிலர் பழனிசாமி தென்னிலை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொடிக் கம்பத்தை வெட்டியது குமார், சேகர் என்றும் அவர்கள் மதிமுகவை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.


 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X