கோவாவில் வெளிநாட்டினர் நிலம் வாங்க தடை - மசோதா தாக்கல்
பனாஜி: கோவா மாநிலத்தில், வெளிநாட்டவர்கள் நிலம் வாங்க தடை வருகிறது. இதுதொடர்பான சட்ட மசோதா அம்மாநில சட்டசபையில் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுதொடர்பான பதிவுத் துறை (கோவா திருத்தம்) சட்ட மசோதாவை
நிதியமைச்சர் தயானந்த் நர்வேகர் தாக்கல் செய்தார்.
பின்னர் அவர் பேசுகையில், கோவாவில் 482 வெளிநாட்டினர் நிலம் வாங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அனைத்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலங்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைகளின் கீழ் வாங்கப்பட்டுள்ளதா என்பதை அதிகாரிகள் பரிசோதிப்பர்.
இந்திய பதிவுச் சட்டத்தில் திருத்தம் செய்ய ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதிகாரம் உள்ளது. அதன் அடிப்படையில் கோவா மாநிலத்தில் இந்த சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் வெளிநாட்டினர், வெளிநாட்டு நிறுவனங்கள், கோவா மாநிலத்தில் நிலம் வாங்க தடை செய்யப்படுகிறது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications