22 ரயில் நிலையங்களில் 'ஷாப்பிங் மால்கள்'!!
புதுக்கோட்டை: சென்னை உட்பட நாட்டின் 22 முக்கிய ரயில் நிலையங்களில் பிரமாண்டமான ஷாப்பிங் மால்கள் அமைக்கப்படும் என ரயில்வேத்துறை இணையமைச்சர் வேலு கூறினார்.
புதுக்கோட்டை வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழகத்துக்குள் தற்போது 90 கி.மீ தூரத்துக்கான மீட்டர்கேஜ் பாதைகள் மட்டுமே, அகல ரயில் பாதையாக மாற்ற வேண்டியுள்ளது. இதுவும் 2010க்குள் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டுவிடும்.
திருச்சியிலிருந்து மானாமதுரை வரை அகல ரயில் பாதை அமைக்கும் பணியை இரண்டாவது முறையாக ஆய்வு செய்தேன். அகல ரயில் பாதை பணி, காரைக்குடியில் இருந்து மானாமதுரை வரை முடியும் நிலையில் உள்ளது. பணியில் ஏற்பட்ட தாமதத்துக்கு மழை, மேம்பாலம் அமைத்தல், ரயில்வே டிராக்குகளை வெல்டிங் செய்வதில் ஏற்பட்ட தாமதம் ஆகியவையே காரணம்.
இந்தப் பணிகளை ஏப்ரலுக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளேன்.
இதைத் தொடர்ந்து மே மாத இறுதிக்குள் ராமேஸ்வரத்தில் இருந்து காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக சென்னைக்கு ரயில் இயக்கப்படும்.
மதுரை ரயில்வே கோட்டத்திற்கு ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டு வளர்ச்சி பணிகள் நடக்கின்றன. கடந்தாண்டு தமிழக ரயில் நிலையங்களை நவீனப்படுத்த, ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டது. இந்தாண்டு ரூ.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளாக பயணிகள் ரயில் கட்டணம் உயத்தப்படாததால், ரூ. 5,000 கோடி ரூபாய் வரை, ரயில்வேக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அவை சரக்கு கட்டணத்தின் மூலம் சரி செய்யப்படுகிறது.
சென்னை-திருச்சி இடையிலான ரயில் பாதையை மின்மயமாக்கும் பணி நடக்கிறது. அதில், விழுப்புரம் வரை பணி முடிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் விழுப்புரம்-திருச்சி இடையிலான பாதையும் மின்மயமாக்கப்படும் என்றார்.
-
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
1-9ம் வகுப்பு மாணவர்களுக்கு.. முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு! கோடை விடுமுறை தேதி அறிவிப்பு -
அசத்தி காட்டிய தமிழ்நாடு.. ஐடியா கேட்டு வந்த உத்தரப் பிரதேசம்! வழிகாட்ட நம்ம ரெடி! -
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை மீட்பது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
இந்தியா முழுவதும் சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை.. சவுதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! -
கோடை மழைக்கு எண்ட் கார்டு.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்! இனிதான் சம்பவம் இருக்கு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி












Click it and Unblock the Notifications