For Daily Alerts
Just In
18 ஆண்டுகளுக்குப் பிறகு தந்தையான ரவி சாஸ்திரி!
மும்பை: முன்னாள் இந்திய வீரர் ரவி சாஸ்திரி, திருமணமாகி 18 ஆண்டுகளுக்குப் பிறகு தந்தையாகியுள்ளார். அவரது மனைவி ரித்துவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான ரவி சாஸ்திரிக்கும், ரித்துவுக்கும் கடந்த 1990ம் ஆண்டு திருமணமானது. ஆனால் இருவருக்கும் குழந்தைகள் இல்லை.
இந்த நிலையில், ரித்து கர்ப்பமானார். அவருக்கு நேற்று மும்பை ப்ரீச்கன்டி மருத்துவமனையில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments
Story first published: Sunday, March 30, 2008, 11:35 [IST]