பணியில் ஒழுங்கீனம்: காஞ்சி கோவில் மேலாளர் சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: பணியில் அலட்சியமாக இருந்ததாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் திருக்கோயில் மேலாளராக பணிபுரிபவர் செங்குட்டுவன். பணியில் ஒழுங்கீனமாக இருந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து அவரை தற்காலிக பணிநீக்கம் செய்து இந்து சமய அறநிலையத்துறை இணை இயக்குநர் பக்கிரிசாமி உத்தரவிட்டார்.
இதேபோல ஏற்கெனவே ஒரு முறையும் பணியில் ஒழுங்கீனத்துக்காக செங்குட்டுவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications