டிஜிபியானார் ஜெயின்-ரவுடிகளுக்கு 'குறி'
சென்னை: தமிழக காவல்துறை தலைவராக (டிஜிபி) இன்று கே.பி.ஜெயின் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்தப் பதவியில் இருந்த ராஜேந்திரன் இன்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார். தனது பொறுப்புக்களை ஜெயினிடம் ஒப்படைத்தார்.
இதன் பின்னர் ஜெயின் நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழக காவல் துறையின் தலைவராக பொறுப்பேற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக காவல் துறை நவீனப்படுத்தப்பட்டு புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவை தீவிரப்படுத்தப்படும்.
காவல் துறை கம்ப்யூட்டர் மயமாக்கப்படும். இந்த மின் ஆளுமை திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களின் செயல்பாட்டை பொதுமக்கள் வெளிப்படையாக அறிந்து கொள்ள முடியும்.
தமிழகத்தில் உள்ள ரவுடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பட்டியலில் உள்ள ரவுடிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அவர்களை ஒழித்து கட்டுவோம்.
எனக்கு தெரிந்த வரை தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் மற்றும் நக்சலைட்டுகள் ஊடுருவல் இல்லை. சமீபத்தில் நடந்த 2 துப்பாக்கி கொள்ளை சம்பவமும் வேதனைக்குரியது. இதுபற்றி விரிவாக விசாரணை நடத்தப்படும் என்றார் ஜெயின்.












Click it and Unblock the Notifications