For Daily Alerts
Just In
பதற்றம்: ஊட்டி-மைசூர், பெங்களூர் பஸ்கள் ரத்து
தமிழகத்தில் இருந்து ஒசூர் வழியாக வந்து செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. ஆனால், மைசூரை ஒட்டிய தமிழக பகுதிகளில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் இன்று ரத்து செய்யப்பட்டுவிட்டன.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கூடலூர், மசினகுடி, தெப்பக்காடு, கக்கனல்லா, பண்டிப்பூர் வழியாக தினமும் 20க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் மைசூர் மற்றும் பெங்களூருக்கு இயக்கப்படும். இன்று பாதுகாப்பு கருதி அவை ரத்து செய்யப்பட்டுவிட்டன.
மற்றபடி தமிழகத்தில் இருந்து பெங்களூருக்கு பஸ்கள், கார்கள், லாரிகள் இன்று வழக்கம்போல் இயங்குகின்றன.
அதே போல கர்நாடக அரசு பஸ்கள், லாரிகளும் வழக்கம்போல் தமிழகத்துக்குள் வந்து செல்கின்றன.
Comments
Story first published: Tuesday, April 1, 2008, 12:23 [IST]