For Daily Alerts
Just In
செல்போனுக்கு தாய் பணம் தராததால் மாணவர் தற்கொலை
பணகுடி: செல்போன் வாங்க தாய் பணம் தராததால் மனமுடைந்த தனியார் ஐடிஐ மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள செண்பகவல்லிபுரத்தை சேர்ந்த வடிவேல் மகன் சரவணகுமார். இவர் வள்ளியூரில் உள்ள தனியார் ஐடிஐ கல்லூரியில் படித்து வந்தார். தனது அம்மாவிடம் செல்போன் வாங்க சரவணகுமார் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவரது அம்மா மறுத்தார்.
இதனால் மனமுடைந்த சரவணகுமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பணகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
Story first published: Tuesday, April 1, 2008, 10:27 [IST]