பஸ் நிலையத்தில் தாயை அடித்து உதைத்த பெண் போலீஸ்
சிவகிரி: சிவகிரி பஸ் நிலையத்தில் தாயை அடித்து உதைத்த பெண் போலீசை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்ராயிருப்பு சுந்தரபாண்டியத்தை சேர்ந்த கடற்கரை மனைவி மாரியம்மாள். இவர்களது மகள் கலைசெல்வி. ராஜபாளையம் சிறப்பு காவல்படையில் பணிபுரிந்து வருகிறார்.
கலைச்செல்வி வீட்டுக்கு வராமல் வெளியில் தங்கி இருப்பதால் மாரியம்மாள் கண்டித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாரியம்மாளும், அவரது உறவினர் குருவம்மாள் என்பவரும் ராஜாபாளையத்தில் இருந்து சுப்பிரமணியாபுரத்திற்கு பஸ்சில் சென்றனர். சுப்பிரமணியாபுரத்தில் பஸ் நிற்காது என்று கண்டக்டர் கூறியதால் இருவரும் சிவகிரி பஸ் நிலையத்தில் இறங்கி நின்றனர்.
அப்போது அங்கு வந்த கலைசெல்வியிடம் வீட்டுக்கு வராமல் இருப்பது குறித்து கேட்டு மாரியம்மாள் மீண்டும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கலைசெல்வி தாயை கீழே தள்ளி தாக்கினார். இதில் காயமடைந்த அவர் சிவகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து மாரியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் சிவகிரி சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் விசாரணை நடத்தி கலைசெல்வியை தேடி வருகிறார்.












Click it and Unblock the Notifications