காவிரி பாதுகாப்புக்கு ரூ 300 கோடி!
ஈரோடு: தேசிய நதி நீர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் காவிரி ஆற்றின் பாதுகாப்புக்காக ரூ. 300 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
தேசிய நதி நீர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் காவிரி, தாமிரபரணி, வைகை போன்ற ஆறுகள் மாசுபடுவதை தடுக்க மத்திய அரசு கடும் முயற்சி எடுத்து வருகிறது.
அதன் பலனாகக்தான் நதியோர கரைகளில் உள்ள நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கும் பணி விரைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலம் குடகுமலையில் உற்பத்தியாகும் காவிரி நதி ஒகேனக்கல், மேட்டூர், ஈரோடு, கொடுமுடி, வாங்கல், மாயனூர், திருச்சி, தஞ்சை வழியாக பூம்புகாரில் கடலில் கலக்கிறது.
ஈரோடு வழியாக வரும் காவிரி நீரில் அதிக அளவு நீர் மாசு ஏற்படுவதாக சுற்றுச்சசூழல் அமைப்பினர் கவலை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் ஈரோடு முதல் திருச்சி வரை காவிரி நதியை பாதுகாக்க ரூ 300 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் ஆற்றில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்கவும், வாய்க்கால் மூலம் கழிவு நீரை வேறு பாதைக்கு திருப்பி விடவும், மக்கள் காவிரி ஆற்றில் குளிக்க ஏற்ற வகையில் ஆற்றுப்படுகையை மேம்படுத்தவும், மண் அரிப்பை கட்டுப்படுத்த மரம் வளர்க்கவும் இந்த நிதி பயன் படுத்தப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது நாட்டில் ஒடும் 34 நதிகளை பாதுகாக்க ரூ 4 ஆயிரத்து 783 கோடி மத்திய அரசு அனுமதித்துள்ளது. அந்தத் திட்டத்தின் கீழ் காவிரி, தாமிரபரணி, வைகை, அடையாறு, கூவம் ஆகியவை இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications