தமிழகத்தில் இன்றுமுதல் கன்னட சேனல்கள் 'கட்'

தமிழ்நாட்டில் ஒகேனக்கல் கூட்டுக்குடி நீர் திட்டத்தை நிறைவேற்றக்கூடாது என்று கூறி கர்நாடகத்தில் உள்ள கன்னட அமைப்புகள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளன.
நாராயண கௌடா தலைமையிலான கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் பெங்களூரில் பல பகுதிகளிலும் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களின் அலுவலகங்களில் நேற்று புகுந்து ரகளை செய்தனர். தமிழ் சேனல்களை ஒளிபரப்ப எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும்பாலான பகுதிகளில் தமிழ் சேனல்கள் நிறுத்தப்பட்டன.
தியேட்டர்களிலும் தமிழ்படங்களை திரையிட விடாமல் தடுத்தனர்.
இந்தநிலையில் கன்னட அமைப்புகளின் போராட்டத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழ்நாட்டில் கன்னட சேனல்களை இருட்டடிப்பு செய்ய கேபிள் ஆபரேட்டர் சங்கத்தினர் முடிவெடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ஒளிபரப்பாகிவரும் 9 கன்னட டிவி சேனல்களை ஏப்ரல் 2ம் தேதி மாலை முதல் நிறுத்தவுள்ளனர். இதை மீறி கன்னட சேனல்களை ஒளிபரப்பும் கேபிள் ஆபரேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications