For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கழுத்தை அறுத்து இளம்பெண் கொடூரக் கொலை

By Staff
Google Oneindia Tamil News

நாகர்கோவில்: இளம்பெண் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். புதரில் வீசியெறியப்பட்ட அவரது உடலை போலீசார் கண்டெடுத்தனர்.

நாகர்கோவில் அருகே உள்ள இறச்சகுளம் சாலையோர புதரில் ஒரு இளம்பெண் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். தகவலறிந்த பூதப்பாண்டி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் அவர்,குமரி மாவட்டம் அனந்தனார்குடியைச் சேர்ந்த நந்தினி (18) என்று தெரிந்தது. 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அவருடைய தந்தை முருகன் குடும்பத்தை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். தாய் வசந்தி, தம்பி ஜான் பினோ (14) தங்கை சோனியாவுடன் (12) நந்தினி இருந்துள்ளார்.

கோவையில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை செய்தார். கடந்த 30-ந் தேதி சொந்த ஊருக்கு புறப்பட்ட நந்தினி, ரயிலில் வந்து கொண்டிருப்பதாக தாய் வசந்தியிடம் போனில் கூறியுள்ளார்.

நெல்லைக்கு வந்துவிட்டதாகவும் இரவு வீட்டுக்கு வந்துவிடுவதாகவும் மீண்டும் போனில் கூறியிருக்கிறார். பின்னர் மீண்டும் பேசிய அவர் காலையில்தான் வீட்டுக்கு வர முடியும் என்று கூறியிருக்கிறார். அதன் பிறகு அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பிரேத பரிசோதனையின்போது நந்தினியின் கையில் ஆணின் தலைமுடியை டாக்டர்கள் கண்டெடுத்தனர். எனவே அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் அல்லது காதல் பிரச்னையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். நந்தினியின் செல்போன் கிடைக்கவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X