நகராட்சி தலைவர் அறையில் 'ஏசி'-அதிமுக அட்டாக்!
கடையநல்லூர்: கடையநல்லூர் நகராட்சியில் அந்திவாசிய பணிகளுக்கு நிதி இல்லாத நிலையில் தலைவர் அறையில் எந்த விதியின் கீழ் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அதிமுகவை சேர்ந்த முன்னாள் நகர்மன்ற தலைவர் ஷாஜகான் கேட்டுள்ளார்.
கடையநல்லூர் நகராட்சி நெல்லை மாவட்டத்திலேயே பெரிய நகராட்சியாகும். இங்கு சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிக்கின்றனர். கடையநல்லூர் நகராட்சி பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சீரான குடிநீர் விநியோகம் இல்லை. வளர்ச்சி பணிகள் ஸ்தாபித்துள்ளன என முன்னாள் கடையநல்லூர் எம்எல்ஏ சுப்பையா பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் தலைவர், ஆணையாளர், இஞ்சினியர் உள்பட குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளதற்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் அன்றாட பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் ஏசி அறையில் அமர்ந்துள்ளதால் அவர்களை பொதுமக்கள் சந்திக்க தயங்குகின்றனர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே இடைவெளி அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், அந்திவாசிய பணிகளுக்கு நிதி இல்லாத நிலையில் தலைவர் அறையில் எந்த விதியின் கீழ் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அதிமுகவை சேர்ந்த முன்னாள் நகர்மன்ற தலைவர் ஷாஜகான் கேட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications