தமிழக டிரைவர்களுக்கு அடி-உதை: பஸ்கள் நிறுத்தம்

கர்நாடகத்தில் கன்னட அமைப்பினரின் வன்முறை இன்னும் ஓயவில்லை. தொடர்ந்து தமிழக பேருந்துகள் தாக்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் இன்று காலை தமிழகத்திலிருந்து பெங்களூருக்கு மூன்று தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் சென்றன. இந்தப் பேருந்துகள் சந்தாபுரா என்ற இடத்தில் சென்றபோது கன்னட அமைப்பினர் பேருந்துகளை மறித்து நிறுத்தினர்.
பின்னர் பேருந்தின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். பிறகு மூன்று பேருந்துகளின் டிரைவர்களையும் கீழே இறக்கி சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் 3 பேரும் காயமடைந்தனர்.
சம்பவம் அறிந்து போலீஸார் விரைந்து வந்து கூட்டத்தினரை கலைந்து போகச் செய்தனர். ஆனால் யாரையும் கைது செய்யவில்லை.
இந்தத் தகவல் ஓசூரில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சென்றது. இதையடுத்து தமிழகத்திலிருந்து பெங்களூர் செல்லும் அனைத்து அரசுப் பேருந்துகளும் ஓசூருடன் நிறுத்தப்பட்டன.
இருப்பினும் கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் எந்தவிதப் பிரச்சினையும் இன்றி இயக்கப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications