For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூத்தாண்டவர் கோவில் விழா நாளை தொடக்கம்

By Staff
Google Oneindia Tamil News

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர் பேட்டை அருகில் உள்ள கூவாகத்தில் வருடாந்திர கூவாகம் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர் பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு 18 நாட்கள் சித்திரை திருவிழா நடைபெறும்.

இந்த திருவிழா அரவாணிகள் திருவிழாவாக கொண்டாப்படுகிறது. இதில் கலந்து கொள்ள இந்தியா முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான அரவாணிகள் கூவாகத்திற்கு வர ஆரம்பித்துள்ளனர்.

இதையொட்டி அரசு சார்பிலும் தன்னார்வ அமைப்புகளின் சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு முகாம்கள், போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X