சென்னையில் ஆசிட் வீசி பெண் கொலை

Subscribe to Oneindia Tamil

தாம்பரம்: சென்னையில் ஆசிட் ஊற்றி பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

தாம்பரத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி (35) கருத்துவேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

அன்வர்பாஷா என்பவரின் டிராவல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு அன்வர்பாஷாவுக்கு புவனேஸ்வரி போன் செய்தார். தன்னை 2 பேர் விரட்டி வருவதாகவும், காப்பாற்றும்படி பதற்றத்துடன் கூறிவிட்டு வைத்துவிட்டார்.

அதிர்ச்சியடைந்த அன்வர்பாஷா, உடனே புவனேஸ்வரியின் வீட்டுக்கு சென்றார். அவரது வீட்டுக்கு அருகில் இருந்த புதரில் உடல் முழுவதும் வெந்த நிலையில் புவனேஸ்வரி மயங்கிக் கிடந்தார்.

அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அன்வர்பாஷா கொண்டு சென்றார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி புவனேஸ்வரி இறந்தார்.

சமீபத்தில் புவனேஸ்வரியின் தோழி பூங்காவனம் என்பவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ரபி என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பான ரகசிய தகவல்கள் புவனேஸ்வரிக்கு தெரியும். அதனால் அந்த கும்பல் புவனேஸ்வரியையும் கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து தாம்பரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+