அல்-உம்மா தீவிரவாதிகளுக்கு 16 ஆண்டுகளுக்கு பின் தண்டனை
தூத்துக்குடி : காரில் வெடிகுண்டுகள், ஆயுதங்கள் கடத்திய வழக்கில், அல்-உம்மா தீவிரவாதிகள் ஐந்து பேருக்கு கோவில்பட்டி நீதிமன்றம், ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
கடந்த 1992-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ம் தேதி, அல்-உம்மா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஹைதர் அலி, அப்துல் காதர், அப்துல் முத்தலிப் உள்ளிட்ட ஐந்து பேர், கோவில்பட்டியிலிருந்து வாடகை காரில் ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை கடத்தி சென்றுள்ளனர்.
பாதி வழியில் டிரைவரை காரின் பின் பகுதியில் கட்டிபோட்டி விட்டு தீவிரவாதிகளில் ஒருவர் காரை ஓட்டிச் சென்றுள்ளார். திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் அருகிலிருந்த மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது.
இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, கோவில்பட்டி கிழக்குபிரிவு போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இவ்வழக்கின் தீர்ப்பு இன்று கோவில்பட்டி நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.
இதில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேருக்கும் தலா ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பதினாறு ஆண்டுகளுக்கு பின் இந்த வழக்கில் பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications