அல்-உம்மா தீவிரவாதிகளுக்கு 16 ஆண்டுகளுக்கு பின் தண்டனை
தூத்துக்குடி : காரில் வெடிகுண்டுகள், ஆயுதங்கள் கடத்திய வழக்கில், அல்-உம்மா தீவிரவாதிகள் ஐந்து பேருக்கு கோவில்பட்டி நீதிமன்றம், ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
கடந்த 1992-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ம் தேதி, அல்-உம்மா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஹைதர் அலி, அப்துல் காதர், அப்துல் முத்தலிப் உள்ளிட்ட ஐந்து பேர், கோவில்பட்டியிலிருந்து வாடகை காரில் ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை கடத்தி சென்றுள்ளனர்.
பாதி வழியில் டிரைவரை காரின் பின் பகுதியில் கட்டிபோட்டி விட்டு தீவிரவாதிகளில் ஒருவர் காரை ஓட்டிச் சென்றுள்ளார். திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் அருகிலிருந்த மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது.
இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, கோவில்பட்டி கிழக்குபிரிவு போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இவ்வழக்கின் தீர்ப்பு இன்று கோவில்பட்டி நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.
இதில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேருக்கும் தலா ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பதினாறு ஆண்டுகளுக்கு பின் இந்த வழக்கில் பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications