ரூ.2 கோடியில் சுற்றுலாத் தலமாகும் துவரங்காடு

Subscribe to Oneindia Tamil

பாவூர்சத்திரம்: நெல்லை மாவட்டம் சிற்றாறு கால்வாய் அணைக்கட்டு அமைந்துள்ள துவரங்காடு பகுதியை ரூ.2 கோடி செலவில் சுற்றுலா தலமாக்க அரசு தீர்மானித்துள்ளது. அங்கு படகு குழாம் அமைப்பது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அடுத்துள்ளது துவரங்காடு கிராமம். இங்கு சிற்றாறு கால்வாய் அணைக்கட்டு உள்ளது. விடுமுறை நாட்களில் இந்த அணைக்கட்டு உள்ள பகுதிக்கு மக்கள் அதிகளவில் வருகின்றனர். இதையடுத்து துவரங்காட்டை சுற்றுலா தலமாக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரி வந்தனர்.

இதுதொடர்பாக ஊராட்சி தலைவர் ராமாத்தாள் முத்தையாசாமி இதுகுறித்து கலெக்டர் பிரகாஷிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து மாவட்ட சுற்றுலா துறை அதிகாரி செல்லப்பா, பொதுப்பணி துறை உதவி பொறியாளர் மணிகண்டன், யூனியன் ஆணையாளர் ஆமினாள் பீவி, பொறியாளர் குமரேசன் ஆகியோர் அணைகட்டு பகுதிகளை ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து சுற்றுலா துறை அதிகாரி செல்லப்பா கூறுகையில், இப்பகுதியை சுற்றுலாதலமாக்குவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இப்பகுதியை சுற்றுலாதலமாக்க ரூ.2.10 கோடி மதிப்பில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ரூ.70 லட்சம் வீதம் 3 கட்டங்களாக இப்பணிகள் நடைபெறும்.

இதற்கான பணிகள் விரைவில் துவங்கும். இங்கு அணையிலிருந்து உபரிநீர் அருவிபோல் விழுகிறது. எனவே மக்கள் குளிப்பதற்கு தேவையான வசதி, படகு குழாம், குழந்தைகள் விளையாட்டு பூங்கா, குடிநீர், கழிப்பறை மற்றும் மின் வசதிகள் செய்யப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+