வானலை வளர்தமிழ் அமைப்பின் ஆண்டு விழா
துபாய் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் மூன்றாவது ஆண்டு துவக்க விழா கடந்த 11ம் தேதி கராமா சிவ் ஸ்டார் பவன் உணவக அரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் 'மௌனம்' எனும் தலைப்பில் கவிதைகளும் படிக்கப்பட்டன. மாதந்தோறும் ஏதேனும் ஒரு தலைப்பில் இந்த கவிதை நிகழ்வு நடைபெற்று வருவதும் அதை தொகுத்து கவிதை நூலாக மாதந்தோறும் வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இம் மாத நிகழ்வினை காவிரி மைந்தன் துவக்கி வைக்க, அதிரை இளைய சாகுல், ஜெயராமன் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.
பின்னர் மௌனம் எனும் தலைப்பில் கந்தநாதன், சந்திரசேகர், வெற்றிவேல் செழியன், ஜியாவுதீன், காவிரி மைந்தன், சிம்மபாரதி, சுரேஷ், சஞ்சீவி, தங்கராசா, கீழை ராஜா, வடிவுக்கரசன், நிலாவண்ணன், மலைவேல், தமிழ்ச்செல்வன், இளைய சாகுல், முத்துப்பேடடை
ஷர்புதீன் உள்ளிட்டோர் கவிதை வாசித்தனர்.
ஈமான் அமைப்பின் ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அழுகின்ற போதும் ஆனந்தம் அடைகின்றபோதும்
மௌனம் மட்டுமே உயர்ந்து நிற்கும் என்றார் காவிரி மைந்தன்.
அதனைத் தொடர்ந்து தாயகத்தில் இருந்து வருகை புரிந்துள்ள இலக்கியச் செல்வர் கவிநேசன் டி.எம்.எம். தாஜுத்தீன் அவர்கள் எழுதி நாகூர் இ.எம். ஹனீபா அவர்கள் பாடிய சிடி விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை நிலா வண்ணன் பெற்றுக்கொண்டார்.
மௌனம் எனும் சிறப்புக் கவிதைச் சிறப்பிதழை கவிஞர் தாஜுத்தீன் வெளியிட முதல் பிரதியை முதுவை ஹிதாயத் பெற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து உரை நிகழ்த்திய கவிஞர் தாஜுத்தீன், கவி என்பது இதயத்தின் ஆழத்திலிருந்து எழுவது. எண்ணம் விரிவாக இருப்பின் வாழ்வும் விரிவாக இருக்கும். எண்ணம் போல் வாழ்வு என்றார்.
இதுபோன்ற இலக்கிய சங்கமமத்திற்கு ஆதரவு நல்கி வரும் சிவ் ஸ்டார் கோவிந்தராஜுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
கவிஞருக்கு வானலை வளர்தமிழ் நிர்வாகிகள் சார்பில் சந்திரசேகரன் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார். அதனைத் தொடர்ந்து டாக்டர் பார்த்தசாரதி, அஷ்ரப் அலி உள்ளிட்டோரும் கௌரவிக்கப்பட்டனர்.
வானலை வளர்தமிழ் அமைப்பினை தொடர்பு கொள்ள:
காவிரி மைந்தன்: 050 251 96 93/[email protected]
-
மிக பெரிய ஆபத்தில் சீனா.. இனி என்ன செய்தாலும் ஒன்னுமே மாறாது.. ஆனா இந்தியாவுக்கு பயங்கர லாபம்! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications