மணமேடையில் மாப்பிள்ளை திடீர் மாயம் - கல்யாணம் நின்றது!

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மாப்பிள்ளை திடீரென மாயமானதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் ரவிசந்திரன். ஒரு ஒர்க் ஷாப்பில் பணியாற்றி வருகிறார்.

இவருக்கும் அதே தெருவை சேர்ந்த சாந்தாமணி என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்

இருவரும் வேறு வேறு ஜாதி, மதத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இருவரும் தங்களது வீட்டினரை சமாதானப்படுத்தி கல்யாணத்திற்கு சம்மதம் பெற்றனர்.

இதையடுத்து பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று காலை திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் மாப்பிள்ளை ரவிச்சந்திரன் அதி காலையில் பாத்ரூம் செல்வதாக கூறி விட்டு சென்றவர் முகூர்த்த நேரம் முடியும் வரை வரவில்லை. இதையடுத்து கல்யாணம் நின்று போனது.

மாப்பிள்ளை திடீரென மாயமானதால் பெண் வீட்டார் பெரும் அதிர்ச்சியும், கல்யாணம் நின்றதால் பெரும் சோகமும் அடைந்தனர்.

இதையடுத்து மாப்பிள்ளை வீட்டார் மீது போலீஸில் புகார் கொடுத்தனர். போலீஸார் விசாரணையில் இறங்கினர். அப்போது ரவிச்சந்திரனுக்கு வேறு ஒரு பெண்ணுடனும் கடந்த 5 ஆண்டுகளாக தொடர்பு இருந்தது தெரிய வந்தது. எனவே அப்பெண்ணுடன் அவர் ஓடியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+