உ.பியில் பெரியார் படத்தை அவமதித்த பாஜகவினர்
லக்னோ: உ.பி. மாநிலம், லக்னோவில் பெரியார் படத்தை பாஜகவினர் தார் பூசி அவமதித்ததால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
உபி. தலைநகர் லகனோவில் உள்ள இந்திய நீதிக் கட்சியின் அலுவலகம் முன்பு பிரமாண்டமான பெரியார் படம் டிஜிட்டல் போர்டில் இடம் பெற்றுள்ளது.
இங்கு நேற்று பாஜகவினர் பெரும் திரளாக வந்து தார்பூசி படத்தை அவமதித்தனர். போராட்டமும் நடத்தினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பாஜகவினர் கூறுகையில், இந்த டிஜிட்டல் பேனரை அகற்றும்படி கோரியிருந்தோம். ஆனால் அதிகாரிகள் அகற்றவில்லை. எனவேதான் இந்தப் போராட்டம் என்றனர்.
பெரியார் இந்தியில் எழுதிய ராமாயானத்தை எதிர்த்து உ.பியில் பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் பெரியாரின் ராமாயானத்திற்கு தடை விதிக்க முடியாது என்று முதல்வர் மாயாவதி கூறி விட்டார்.
இந் நிலையில் ராம நவமியையொட்டி பாஜகவினர் இந்தப் போராட்டத்தில் பாஜகவினர் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications