சேது வழக்கு: ஏப் 29ல் இறுதி விசாரணை- தடை நீக்கம் இல்லை

ராமர் பாலத்தை இடிப்பதை எதிர்த்து ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது, அதை தேசிய பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும், சேது சமுத்திரத் திட்டத்தை வேறு பாதையில் நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
இந்த வழக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம் சேது சமுத்திரத் திட்டப் பணிகளை ராமர் பாலப் பகுதியில் செயல்படுத்த இடைக்காலத் தடை விதித்தது. மேலும் இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்தி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
அதன்படி முதலில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் ராமர் இருந்தார் என்பதற்கோ, ராமர் பாலத்தை அவர்தான் கட்டினார் என்பதற்கோ எந்தவித ஆதாரமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை எழுப்பியதால் இந்த பதில் மனுவை மத்திய அரசு திரும்பப் பெற்றது.
இதையடுத்து பிப்ரவரி 29ம் தேதி புதிய பதில் மனுவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த நிைலயில் இன்று ராமர் பாலம் தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது திட்டத்திற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என மத்திய அரசுத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
இருப்பினும் இடைக்காலத் தடையை நீக்கும் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. மேலும் ஏப்ரல் 29ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் எனவும் நீதிபதிகள் அறிவித்தனர்.
-
"அந்த" விஷயத்திற்கு மாத்திரை சாப்பிட்ட இளைஞர்.. துடிதுடித்து மரணம்.. உடலை விட்டுவிட்டு ஓடிய காதலி -
ஹார்முஸ் முடங்கினாலும் பிரச்சனை வராது.. LPG சிக்கலுக்கு உள்நாட்டிலேயே இருக்கும் தீர்வு! இது தெரியுமா -
"கொரோனா டைம் போல.." ஒரு நொடி யோசித்து பிரதமர் சொன்ன வார்த்தை.. எல்பிஜி சிக்கல் அவ்வளவு மோசமா? -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட்












Click it and Unblock the Notifications