கொடநாடு வழக்கு-நீதிபதிக்கு மிரட்டல்-வேறு நீதிபதி விசாரணை
Subscribe to Oneindia Tamil
சென்னை: கொடநாடு எஸ்டேட் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மோகன்ராம் தனக்கு மிரட்டல் வருவதாக கூறி விலகிக் கொண்டதால் அவருக்குப் பதில் நீதிபதி சந்துருவிடம் வழக்கு விசாரணை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் பொதுமக்கள் செல்வதற்கு இடையூறாக கேட் போடப்பட்டிருப்பதாக கூறி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பல்வேறு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு 4 நாட்களுக்கு முன்பு நீதிபதி மோகன்ராம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, தனக்கு மிரட்டல் வருவதாக கூறி விசாரிக்க மறுத்தார்.
இதையடுத்து நீதிபதி சந்துருவிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று நீதிபதி சந்துரு முன்பு வழக்குகள் விசாரணைக்கு வந்தன. அப்போது ஜெயலலிதா சார்பில் நவநீதகிருஷ்ணன் ஆஜரானார்.












Click it and Unblock the Notifications