வேகமாக ஏறிய பணவீக்கம் கொஞ்சம் குறைந்தது
டெல்லி: கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவாக 7.41 சதவீதமாக உயர்ந்திருந்த பண வீக்கம் நடப்பு வாரத்தின் முடிவில் 7.14 சதவீதமாக குறைந்துள்ளது.
கடந்த 2004ம் ஆண்டுக்குப் பின்னர் இதுவரை இல்லாத அளவாக கடந்த வாரம் பண வீக்க விகிதம் 7.41 சதவீதமாக உயர்ந்து நாட்டையே கிடுகிடுக்க வைத்தது.
இந்த நிலையில் ஏப்ரல் 5ம் தேதியுடன் முடிந்த நடப்பு வாரத்தில் பண வீக்க விகிதம் 7.14சதவீதமாக குறைந்துள்ளது.
தொடர்ந்து எட்டு வாரங்களாக உயர்வு நிலையில் காணப்பட்ட பண வீக்க விகிதம் குறையத் தொடங்கியிருப்பது சாதகமான சூழ்நிலையாக கருதப்படுகிறது. இருப்பினும் 5 சதவீத அளவுக்கு பண வீக்க விகிதம் குறைந்தால்தான் பொருளாதார சீர்குலைவைத்த தடுக்க முடியும் என்கிறது ரிசர்வ் வங்கி.
நேற்று பேசிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், பண வீக்க விகிதத்தைக் குறைத்த அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும் என்று கூறியிருந்தார். அரசுக்கு வரும் வருவாய் அளவு குறையும் அளவுக்கு நடவடிக்கை எடுக்கவும் அரசு தயங்காது என்றும் அவர் அறிவித்திருந்தார்.
மேலும், விலைவாசியை வேண்டும் என்றே உயர்த்துவோர், கள்ளச்சந்தைக்காரர்கள், பதுக்கல் பேர்வழிகள் மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications