போலீஸ் உளவாளி கொலை வழக்கிலும் கோபால் விடுதலை
கோபிசெட்டிப்பாளையம்: போலீஸ் உளவாளி ராஜாமணி கொலை செய்யப்பட்ட வழக்கிலும் நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு விடுதலை கிடைத்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலங்களில் நக்கீரன் கோபால் மீது பல வழக்குகள் போடப்பட்டன. இதில் படிப்படியாக அவர் விடுதலை ஆகி வருகிறார்.
நேற்று முன்தினம் ஆயுதம் வைத்திருந்ததாக கூறித் தொடரப்பட்ட பொடா வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார் கோபால். இந்த நிலையில் நேற்று உளவாளி ராஜாமணி கொலை வழக்கிலிருந்தும் விடுதலையாகியுள்ளார்.
வீரப்பனின் நடமாட்டம் குறித்து போலீசுக்கு உளவு சொல்லி வந்தவர் ராஜாமணி. இவர் கடந்த 1998ம் ஆண்டு வீரப்பனால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக வீரப்பன், கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திர கெளடா, ரங்கசாமி, நக்கீரன் கோபால், மோகன், சரவணன், நக்சலைட்டுகள் சத்தியமூர்த்தி, ஜெயப்பிரகாஷ், முத்துக்குமார், மணிகண்டன் ஆகிய 11 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
விசாரணை நடந்து வந்த காலத்தில், வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகெளடா, ரங்கசாமி, சரவணன் ஆகியோர் இறந்து விட்டனர். மற்ற 6 பேர் மீதும் கோபிச்செட்டிப்பாளையம் விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகநாதன் நேற்று தீர்ப்பளித்தார். 6 பேர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அனைவரையும் விடுவிப்பதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
கோபால் மீது தொடரப்பட்ட வழக்குகளில் இதுவரை அந்தியூர் டீக்கடை கந்தவேல் கொலை வழக்கு, பக்தவச்சலம் கொலை வழக்கு, ஆயுதம் வைத்திருந்ததாக பொடா வழக்கு, உளவாளி ராஜாமணி கொலை வழக்கு ஆகியவற்றில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியா முழுவதும் சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை.. சவுதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! -
தமிழ்நாட்டில் வெப்பநிலை அடியோடு குறையப்போகுது.. வானிலை மையம் குட்நியூஸ் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்!












Click it and Unblock the Notifications