For Daily Alerts
Just In
சென்னை-மதுரைக்கு ஏர் திராவிடா விமானம் சேவை
சென்னை: சென்னைக்கும், மதுரைக்கும் இடையே வரும் ஜூலை மாதம் முதல் ஏர் திராவிடா நிறுவனம் புதிய விமான சேவையை தொடங்கவுள்ளது.
ரூ. 110 கோடி முதலீட்டில் 3 விமானங்களை இந்த நிறுவனம் வாங்கவுள்ளது. இந்த விமானங்கள் தலா 50 இருக்கைகளைக் கொண்டதாகும். விமானக் கட்டணம் பயணிகளைக் கவரும் வகையில் குறைவாக இருக்கும் என நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராமச்சந்திர அய்யர் தெரிவித்துள்ளார்.
இந்த சேவையைத் தொடங்கிய பின்னர் தென்னிந்தியாவில் மேலும் 3 விமான சேவையை தாங்கள் தொடங்கப் போவதாகவும் அய்யர் தெரிவித்தார்.
Comments
Story first published: Friday, April 18, 2008, 14:38 [IST]